பெண் போலீசை தாக்கி 6 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்

திண்டிவனம் அருகே பெண் போலீசை தாக்கி 6 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
x
திண்டிவனம் அருகே பெண் போலீசை தாக்கி 6 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மரக்காணம் ரோடு காமராஜர் தெருவை சேர்ந்தவர் சத்யா. இவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் வந்த அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர் வழிமறித்தார். பின்னர் சத்யாவின் கன்னத்தில் அடித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின் மற்றும் ஒன்றரை பவுன் செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆமோஸ் பெர்னாண்டஸ் செயின் பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 5 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்