தமிழகத்தில் மேலும் 23,443 பேருக்கு கொரோனா | Corona
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 23 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 63 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13 ஆயிரத்து 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 8 ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 236 பேருக்கும், கோவையில் 2 ஆயிரத்து 42 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரியில் 831 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் 241 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 231 பேர் குணமடைந்துள்ளனர். 10 பேர் மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Next Story