#BREAKING : ராஜேந்திர பாலாஜியை பிடிக்க டெல்லி விரைந்தது தனிப்படை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ராஜேந்திர பாலாஜி மீது ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 3 கோடி வரை மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 8 தனிப்படைகள் அமைத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த 7 பேரிடமும் விருதுநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதிமுக நிர்வாகிகள் இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டெல்லியில் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தற்போது டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்