கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு போலீஸ் காவல்

கொடநாடு வழக்கில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு போலீஸ் காவல்
x
கொடநாடு வழக்கில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விசாரணை பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கனகராஜின் மரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் கனகராஜின் நண்பர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தனபாலை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.  இதையடுத்து தனபாலை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்