பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பட்டாசு கடையில் இன்று மாலை, திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அருகே உள்ள கடைகளுக்கும் மளமளவென பரவியது. இதில் அருகே இருந்த பேக்கரி மற்றும் ஹோட்டல்களில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 
தீ விபத்து ஏற்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்