"வடகிழக்கு பருவ மழைக்கு தயார்" : வருவாய்-பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை

வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய்-பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கு தயார் : வருவாய்-பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை
x
வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக  வருவாய்-பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

வடகிழக்கை பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 276 புள்ளி 62 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 690 புள்ளி 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4 ஆயிரத்து 227 மழை நீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல நெடுஞ்சாலைத் துறையால் 1 லட்சத்து 33 ஆயிரத்து 677  பாலங்கள், சிறு பாலங்கள் அடியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறையின் நீர்நிலைகளில் 6 ஆயிரத்து 618 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, 18 ஆயிரத்து 626 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீர்நிலைகளின் கரைகள் பலப்படுள்ளதாகவும், மின்துறையின் சார்பாக ஒரு லட்சத்து 12 ஆயிரம்  மின் கம்பங்களும், 25 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்ட மின் கடத்திகள் மற்றும் 800 மின் மாற்றிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, பேரிடர் காலங்களில் முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க 21 ஆயிரத்து உயர் VHF கருவிகளும், 600 செயற்கைக்கோள் தொலைபேசிகளும், 296 நேவிகேசன் உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வருவாய்த்துறை, சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகட்டுப்பாட்டு மையமும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள  1070 மற்றும் 1077 என்று இலவச தொலைபேசி எண்ணும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் வசதியும் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்