நடிகர் சூரி உறவினர் வீட்டில் கைவரிசை காட்டி கைதான விக்னேஷ் ஜாமின் கோரி மனு

மதுரையில் நடிகர் சூரியின் உறவினர் வீட்டில் கைவரிசை காட்டி கைதான விக்னேஷ் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சூரி உறவினர் வீட்டில் கைவரிசை காட்டி கைதான விக்னேஷ் ஜாமின் கோரி மனு
x
மதுரையில் நடிகர் சூரியின் உறவினர் வீட்டில் கைவரிசை காட்டி கைதான விக்னேஷ் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சூரியின் சகோதரர் இல்லத் திருமணம் கடந்த மாதம் 9ஆம் தேதி மதுரையில் நடந்தது. அப்போது 10 சவரன் நகைகளை திருடியதாக பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சிறையில் இருக்கும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரி அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நகைக்கடை வைத்திருப்பவர் அல்லது முக்கிய பிரமுகர் ஒருவர்  விக்னேஷூக்கு உறுதி மொழி பத்திரம் வழங்கினால் ஜாமின் தருவதாக கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்