சென்னையில் வரும் 24ஆம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் - சென்னை குடிநீர் வாரியம்

சென்னையில் வரும் 24ஆம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது
x
சென்னையில் வரும் 24ஆம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வரும் 24ஆம் தேதி திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், சோழிங்கநல்லூர், அடையார், பெசன்ட் நகர், வேளச்சேரி, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல், மறுநாள் காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்