சாலையில் கொட்டிய மருத்துவக் கழிவுகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டியதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டியதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவிகாபுரம் சாலையில், மருத்துவக் கழிவுகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டிச் சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், இது போன்ற கழிவுகள் கிடப்பதால் நோய் தொற்று பரவும் என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மருத்துவக் கழிகவுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.
Next Story