மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகை மனு..

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நடிகை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகை மனு..
x
மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகை மனு.. 

 முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நடிகை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி மணிகண்டனுக்கு எதிராக நடிகை புகார் அளித்திருந்தார். இதில் கைது செய்யப்பட்ட அவருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், மணிகண்டன் தனக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி நடிகை மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னையில் இருந்து கொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்பதாலும்,   மாதாந்திர செலவு இருப்பதாலும், இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால், இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நடிகை இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதன் விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்