தமிழகத்தில் மேலும் 3,867 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்து 5 ஆக அதிகரித்து உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 35 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்து ஈரோட்டில் 349 பேரும், சேலத்தில் 245 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தஞ்சாவூரில் 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் புதிதாக 225 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்