தலைமுடியை பிய்த்து சாப்பிட்ட மாணவி - "ஆன்லைன் கல்வியால் மன உளைச்சல்"

விழுப்புரத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ அளவிலான முடிகளால் ஆன கட்டி அகற்றப்பட்டுள்ளது.
x
விழுப்புரத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ அளவிலான முடிகளால் ஆன கட்டி அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வரும் அவர், அடிக்கடி தலையில் கைவைத்து வந்துள்ளார். இதனிடையே, வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர். எண்டோஸ்கோப்பி மூலம் உறுதி செய்ததாகவும், ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் முடியை சாப்பிட்டதும் தெரியவந்தது. மாணவிக்கு கவுன்சிலிங் அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்