ஜூலை 31க்குள் +2 மதிப்பெண் - உச்சநீதிமன்றம் உத்தரவு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
x
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மாநில பாடத்திட்டத்தில் நடைபெறும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில் ஒரே மாதிரியான மதிப்பெண் மதிப்பீடு முறையை உருவாக்க உத்தரவிட முடியாது திட்டவட்டமாக தெரிவித்ததனர்.மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்கள் மதிப்பெண் முறையை 10 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும், மதிப்பெண் முடிவுகளை அனைத்து மாநிலங்களும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்