தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
x
தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்,தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2  முதல் 3  டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்