தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்; புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்; புதிய தலைமை  வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம்
x
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து  புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்று கொண்டார். அதைத் தொடர்ந்து, அரசு தொடர்புடைய முக்கிய வழக்குகளில் ஆஜராகிவந்த அவர், தற்காலிக அடிப்படையில் 17 வழக்கறிஞர்களை நியமிக்க தமிழக அரசுக்கு கடந்த 10ஆம் தேதி கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக 17 வழக்கறிஞர்களை நியமித்து  தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் ஆஜராக பி.முத்துக்குமார், ஆர்.நீலகண்டன், சி.ஹர்ஷா ராஜ், எஸ்.ஜான் ஜெ. ராஜா சிங், ஏ. ஷப்னம் பானு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில், ஏ. தாமோதரன், ஆர். முனியப்பராஜ், ஜெ. சி. துரைராஜ், இ. ராஜ் திலக், எல். பாஸ்கரன், ஏ. கோபிநாத் ஆகியோர் ஆஜராக உள்ளனர். மதுரை கிளையில் சிவில் தன்மை வழக்குகளில் வழக்கறிஞர்கள் வீர.கதிரவன், பி. திலக்குமார், ஏ. கே. மாணிக்கம் ஆகியோரும், கிரிமினல் தன்மை வழக்கில்  எஸ். ரவி, எம். முத்துமாணிக்கம் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர்.  புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்படும் வரை , இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள் என தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்