டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மனு - மத்திய ,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளத.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி, எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுபானங்கள் விற்பனையை இன்னும் அனுமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Next Story