நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்
x
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

+2  மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவதை அடுத்து, நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு  மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.+2 பொதுத் தேர்வுகள் மே 3 ஆம் தேதி தொடங்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் , கொரோனா பரவல் தீவிரத்தை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் இந்த தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 16ம் தேதி தொடங்கிய செய்முறைத் தேர்வுகள் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று உயரதிகாரிகளுடன் கல்வித்துறை முதன்மை செயலாளர் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில்,  மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்