மரத்தில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தமிழக விவசாய கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மரத்தில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
x
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தமிழக விவசாய  கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி அடுத்துள்ள கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கம் தண்ணீர் திறப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் தங்களை புறக்கணித்ததாக கூறி, விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை மரத்திலிருந்து இறங்கி வர செய்து, திட்டக்குடி வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது திட்டக்குடி டிஎஸ்பிக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்