"கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் 4000 பேரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் 4000 பேரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களின் உயிரை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்கு தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
கொரோனா நோய் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத்துறைக்கும் , மக்களுக்கும் தேவை என்று கூறியுள்ள ஸ்டாலின், செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமது முகநூல் பதிவில்  வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்