தமிழகத்தில் மேலும் 2,146 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 387 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மேலும் 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 591 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 819 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story