7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி - ஆளுநருக்கு அண்ணாமலை ஐ.பி.எஸ். நன்றி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி - ஆளுநருக்கு அண்ணாமலை ஐ.பி.எஸ். நன்றி
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கலந்து கொண்டு பேசினார். சிபிஎஸ்இ , கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிக்கள் , பள்ளிகள் தங்களுக்கு தரும் 10 இடங்களையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்.  அந்த இடங்களுக்கு எம்.பி.க்கள் எதற்காக போட்டி போட்டு கொண்டு  கடிதம் தருகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 7.5  சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு  அனுமதி அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்து கொண்ட அண்ணாமலை, இதன்மூலம் ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு மருத்துவ கல்வி படிக்க இடம் கிடைக்கும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்