50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த மறுப்பு" - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து
50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது வருத்தமளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, வருத்தமளிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் ஒபிசி பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Next Story