2 வது நாளாக 3 ஆயிரத்தை விட குறைந்த பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 2 வது நாளாக 3 ஆயிரத்தை விட குறைந்துள்ளது.
x
இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 7 லட்சத்து 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 10 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரம் படி, 30 ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6 லட்சத்து 67 ஆயிரம் 475 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் ஒரே நாளில் 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும், 3 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. 9 ஆயிரத்து 639 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்