தமிழகத்தில் புதிதாக 4,410 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஒரே நாளில் 5 ஆயிரத்து 55 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில் மேலும் ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 667 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 257 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்