குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது.
x
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆள்கள் நடமாட்டம் இன்றி அருவி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்