"கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
x
கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை  தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர்,   உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், அனைத்து வகை விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றனர். கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் சிறப்பானவை என்றும், அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்