செயல்திறன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை தீவுத்திடலில் நடந்த அரசு விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, பெஞ்சமின், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் 92 வார்டுகளில் திடக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8 ஆண்டுகளுக்கு குப்பைகள் அகற்றும் பணியை ஸ்பெயின் நாட்டு நிறுவனம் செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்கு உதவும் வகையில், இ- ரிக்ஷாக்கள், 300 கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், 3 ஆயிரம் பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
Next Story