குட்கா விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு - சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மனு தாக்கல்
சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சி தலவைர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தடையை நீக்கக் கோரி, சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நோட்டீசுக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story