வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரிக்கை - சென்னையில் விவசாய சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

வேளாண் மசோதாவை திரும்ப பெறவலியுறுத்தி சென்னை பாரிமுனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,.
x
வேளாண் மசோதாவை திரும்ப பெறவலியுறுத்தி சென்னை பாரிமுனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. காவல்துறையினர் தடுப்பு வேலிகள் கொண்டு போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால்  பாரி முனை சந்திப்பில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது,. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம், வேளாண் மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் 25 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் சாலை மறியல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்