பிரபல நகை கடையில் வருவாய் துறையினர் சோதனை - கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு?

கேரள தங்க கடத்தலை அடிப்படையாக கொண்டு திருச்சியில் இயங்கிவரும் பிரபல நகைக்கடையில், திடீர் சோதனை நடத்தப்பட்டது.
பிரபல நகை கடையில் வருவாய் துறையினர் சோதனை - கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு?
x
திருச்சியில் உள்ள  பிரபல நகைக் கடையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டனர். 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தொடர்ந்து 8 மணி நேரம் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது,. கேரளா தங்க கடத்தல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், கொள்முதல் செய்யப்பட்டுள்ள நகைகளுக்கு முறையாக ரசீதுகள் உள்ளதா என்பது குறித்தும் அப்போது ஆய்வு செய்யப்பட்டது,. தங்கம் கொள்முதல் செய்யப்படும் இடங்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நகைகளின் தரம் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகள் அப்போது ஆய்வு செய்துள்ளனர்,.


Next Story

மேலும் செய்திகள்