100 அடியை எட்டிய பவானிசாகர் அணை - 2,850 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
100 அடியை எட்டிய பவானிசாகர் அணை - 2,850 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
x
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த 2 தினங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 906 கன அடியாக அதிகரித்துள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் இருந்து 2 ஆயிரத்து 300 கன அடி நீரும், பவானி ஆற்றில் 550 கனஅடி நீரும் என மொத்தம் 2850 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்