"ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசின், அரியர்ஸ் தேர்ச்சி அறிவிப்புக்கு, வீணாக எதிர்ப்பு தெரிவிக்கும், ஏஐசிடிஇ அந்த போக்கை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தமிழக அரசின், அரியர்ஸ் தேர்ச்சி அறிவிப்புக்கு, வீணாக எதிர்ப்பு தெரிவிக்கும், ஏஐசிடிஇ அந்த போக்கை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில் எந்த விதிமீறலும்  இல்லை; எந்தத் தவறும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி கூடாது என்றால், அடுத்த தேர்வு வரும் வரை மாணவர்கள், கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகக் கூடும் என்றும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்