தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 78 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 776 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா
x
தமிழகத்தில் இன்று 78 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 776 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 256 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 89 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 51 ஆயிரத்து 215 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் புதிதாக 949 பேருக்கு கொரோனா 

சென்னையில் இன்று 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து  பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 16 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆயிரத்து 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  மொத்தம் 11 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்