முல்லைப்பெரியாறு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
முல்லைப்பெரியாறு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
x
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த 'ஜோ ஜோசப்' என்பவர் தாக்கல் செய்த மனுவில் முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த 2018ல் வெளியிட்ட அணை பாதுகாப்பு பராமரிப்பு  வழிகாட்டு நெறிமுறைகள்'  அடிப்படையில் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறாதா ? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்