"கொரோனாவிலிருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி." - மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி. கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
x
பாடகர் எஸ்.பி.பி. கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். எஸ்பிபி உடல் நிலை தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்பிபி உடல்நிலை நன்கு தேறியுள்ளதாகவும், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ஐபேடில் பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தவிர, எஸ்.பி.பி., தான் பேச நினைப்பதை எழுதி காண்பிப்பதாகவும் கூறியுள்ளார். நுரையீரல் தொற்று குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ள சரண், எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்