மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடக்கம்

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல் கட்டமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடக்கம்
x
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல் கட்டமாக சென்னையில் இருந்து 
வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும், பேருந்து நிலையத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.  ஒரு பேருந்தில் 26 முதல் 32 பயணிகள் வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரையில் இருந்து வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கம்

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை இன்று தொடங்கி உள்ள நிலையில், மதுரையில் இருந்து ஏராளமான பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. முதற்கட்டமாக மதுரையில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் ஓடத் தொடங்கின.
இதையொட்டி, அதிகாலையில் இருந்தே பயணிகள் பேருந்து நிலையங்களில் திரண்டனர். 

நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கம்

நெல்லையில் இருந்து தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட அதிக தூரம் செல்லக் கூடிய விரைவு பேருந்துகளும் சேவையை தொடங்கி உள்ளன. பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

விழுப்புரம் கோட்டத்தில் 2 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

விழுப்புரத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது. விழுப்புரம் கோட்டத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே 2 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களில் 147 நகர பஸ்கள், 255 புறநகர பஸ்கள் என மொத்தம் 402 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

களைகட்டிய திருச்சி பேருந்து நிலையம்

திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் நெடுந்தூரம் செல்லும் விரைவு பேருந்துகளும் இயக்கத்திற்கு வந்தன. பேருந்துகள் சேவை மீண்டும் தொடங்​கி உள்ளதால், திருச்சி பஸ் நிலையம் களைகட்டி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்