காணொலி காட்சி வாயிலாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
காணொலி காட்சி வாயிலாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
காணொலி காட்சி வாயிலாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து விருதுக்கு தேர்வான திலீப் மற்றும் சரஸ்வதி ஆகிய 2 பேருக்கு 'நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரான ஆர்.சி.சரஸ்வதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் விருது பெற்றனர்.
Next Story