ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி மனு

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு வரும் 8ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி மனு
x
கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் சென்னையில் கடந்த 21ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்றக்கோரியும், சங்கரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரியும் அவரின் தாய் கோவிந்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், மனுவுக்கு பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. மாஜிஸ்திரேட் அறிக்கை வராததால், விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, காவல்துறை தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய  உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்