தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து இருக்கிறது.
x
தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒரேநாளில், 6 ஆயிரத்து 406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  3 வயது பெண் குழந்தை உள்பட 94 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 231 ஆக உயர்ந்து இருக்கிறது. 52 ஆயிரத்து 721 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சென்னையில் புதிதாக 1,249 பேருக்கு கொரோனா 

சென்னையில், மேலும் ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்து 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில், மேலும் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , ஆயிரத்து 427 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 ஆயிரத்து 472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்