தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
x
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதுதொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு, இடைக்கால தடை விதித்தது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர்மனுதாரருக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்