"இ பாஸ் முறை-வரும் 29ல் ஆலோசனை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கொரோனா ஊரடங்கு தொடர்பாக வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், இ-பாஸ் முறை குறித்து பேசப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊர் சொந்த திரும்ப விரும்புவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருகிற 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இ-பாஸ் முறை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Next Story