"விநாயகர் சிலை ஊர்வலம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு"

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
x
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ராமசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை அவசரமாக பட்டியலிடக் கோரி வழக்கறிஞர் ராமசாமி தரப்பினர் முயற்சி செய்துவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்