விநாயகர் சிலை ஊர்வலம் - உயர்நீதிமன்றம் தடை

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊர்வலம் நடத்தப்படாது எனவும், முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இந்து முன்னணி, தமிழ்நாடு சிவசேனா கட்சி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில், வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்படும், விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. சென்னையில் மெரீனா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்