சங்கர் வழக்கில் சின்னசாமி விடுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
x
உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும், ஜெகதீஷ் உள்பட ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் சென்னை உயர்நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்