சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகன் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் - மதுரை சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகன் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் - மதுரை சிறையில் அடைப்பு
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார். இரு தினங்களுக்கு முன்பு, காவலர் முத்துராஜ் குணமடைந்த நிலையில் தற்போது காவலர் முருகனும் பூரண குணமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து இருவரும், மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மத்திய சிறைச்சாலையில் இரண்டு காவலர்களும் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்