வடசென்னையில் தொடரும் காற்றாடி கலாச்சாரம் - போலீசார் நடத்திய சோதனையில் 186 காற்றாடிகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக சென்னையில் ஒரேநாளில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடசென்னையில் தொடரும் காற்றாடி கலாச்சாரம் - போலீசார் நடத்திய சோதனையில் 186 காற்றாடிகள் பறிமுதல்
x
ஊரடங்கு காலத்தில் வடசென்னையில் காற்றாடி விடுபவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வந்தது. மாஞ்சா காற்றாடியால் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 3 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து சென்னை வடக்கு மண்டல காவல்நிலைய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்  ஒரே நாளில் 55 பேரை  கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 186 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்