தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா - இன்று மட்டும் 119 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா - இன்று மட்டும் 119 பேர் உயிரிழப்பு
x
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 6 ஆயிரத்து 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தமாக 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 119 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 53 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

சென்னையில் மேலும் 989 பேருக்கு தொற்று

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்து 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று ஆயிரத்து 61 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று அதிகப்படியாக விருதுநகர் மற்றும் கோவையில் தலா 13 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சென்னையில் மொத்தம் 11 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்