ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி - ஓல்கா நதியில் குளிக்கச்சென்றபோது விபரீதம்

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த தமிழக மாணவர்கள் 4 பேர் வோல்கா நதியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த தமிழக மாணவர்கள் 4 பேர், வோல்கா நதியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. VOLGA நதிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் 4 பேரும், குளிப்பதற்காக நதியில் இறங்கியபோது நீரில் மூழ்கி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை மாணவர் ஸ்டீபன் லெபாக், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், மற்றும் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்