கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
x
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழை காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணை நிரம்பியது. முழுக் கொள்ளளவான 100 அடியில் 97 அடி வரை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, 22 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பில்லூர் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்