இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் - உரிய விசாரணை நடத்தி வழக்குபதிவு என தகவல்

நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர், இ-பாஸ் இல்லாமல், கொடைக்கானலுக்கு வந்துள்ளதாக, கோட்டாட்சியர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் - உரிய விசாரணை நடத்தி வழக்குபதிவு என தகவல்
x
முன்னதாக ஊடரங்கு காலத்தில் பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக, இருவருக்கும் வனத்துறை சார்பில் தலா ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் விமல் மற்றும் சூரி உட்பட இயக்குனர்கள் அனைவரும் இ-பாஸ் இல்லாமல் கடந்த 15 ஆம் தேதி வந்தததும் உள்ளூர் நபர் ஒருவர் உதவியுடன் அவர்கள் கொடைக்கானலில் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறியுள்ளதாகவும் கோட்டாட்சியர் சிவகுமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்